Tuesday, October 28, 2014



வண்ணத்து பூச்சிகளை
மைதானத்தில் நிரப்பி விடுகிறாள்
அந்த குழந்தையின் வருகை
அவள் சிணுங்களில்
பல பூக்கள்
மைதானத்தில் சிதறி விடுகின்றன
எல்லாவற்றை சொல்லி விட்டு
முதலில் இருந்து சொல்லுகிறேன்
என்கிற சுவாரசியம் திரைபடங்களில்
கூட இருப்பதில்லை
வானத்தில் துளி சிந்தாத
மழை
மழலை அழுகை
கூப்பிடுகையில் வரமாட்டேன்
என நீ துள்ளி ஓடுகையில்
மான்குட்டி அழகு
தோற்றுவிடுகிறது
அவள் பேசுகையில்
சாக்லேட் பாய் இனிப்பாய்
ஏதும் தெரியாமயாய்
கரைந்து வரும் கணங்கள்
கோடுகள் இல்லாமல்
பல ஓவியங்கள் உனது
முகங்களின் உதடு சுழிக்கும்
தருணங்களில்
உனக்காகவே எல்லா விதி
மாற்றப்படுகிறது...